என் சிறுவயதில் ஏற்பட்ட பிரபஞ்சத்தின் மீதான ஆர்வம் என்னை வேறு பரிமாணத்திற்கு அழைத்துச் சென்றது. தேட தொடங்கினேன்.
நேற்றுவரை எனக்கு ஓர் மாபெரும் இரகசியம் புலப்பட்டது. அதை மக்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்த பக்கத்தை நான் தொடங்கினேன். இங்ஙனம் பிரசாத்


1 டிச., 2015

குண்டலினி என்றால்?


குண்டலினி என்றால்?


அறிவியல் தளம்

நம் அனைவரின் உடலிலும் உள்ள அணுக்களில் மின்காந்த சக்தி உள்ளது. 72000 நாடிகளும் 7 ஆதார சக்கரங்களில் பிணைக்கப்பட்டுள்ளது. உடலில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் இங்கிருந்துதான் சக்தி கிடைக்கிறது. 

ஆனாலும் 7ல் சக்தி கிடங்காக செயல்படுவது மூலாதாரம் மட்டுமே. காரணம் ஈர்ப்பு விசையினால் அந்த சக்தி அங்கே உறைந்துள்ளது. நாம் சுவாசிக்கும் போது உட்கொள்ளும் மின்காந்த சக்தி மூலாதாரதிற்கு சென்று சேமிக்கபடுகிறது. நம் உடலுக்கென்று எந்த தனி நோக்கும் கிடையாது. 

அதை எப்படி பாவிக்கிறோமோ அப்படியே ஆகிவிடும். மனதை மேல்நோக்கி(இறை அல்லது சூரியன்) செலுத்தும்போது நம் உடலில் உறைந்திருக்கும் அந்த ஆற்றல் புவியீர்ப்பு விசைக்கு எதிராக செயல்பட்டு மேலேறுகிறது. 

அதாவது புவியின் விடுபடு திசைவேகமான 11200km/sec வேகத்தையும் மீறி பீனியல் கிளான்ட் நோக்கி பயணிக்கிறது. அவ்வாறு பயணிக்கும்போது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் அதீத சக்தி பாய்வதால் நாம் இனம்புரியாத கிளர்ச்சி நிலையை அடைகிறோம்.

ஆன்மீக தளம்


குண்டம் என்றால் சேமிக்கப் பெறும் பொருட்களை தாங்கி எளிதில் அது வெளியேறாதபடி பாதுகாக்கும் இடம். குண்டத்தில் தங்கி லயம் பெறுகிற சக்தி குண்டலினி ஆயிற்று. மனித சரிரத்தைத் தாங்கி நிப்பது குண்டலினி சக்தியே, இது பாம்பு போல் வளைந்து சுருண்டு சரீரத்தினுள் எருவாய்க்கும், கருவாய்க்கும் இடையில் உள்ளது. இந்த இடத்திற்கு மூலாதாரம் என்று பெயர்.

குண்டலினி சக்தியை விழிக்கச் செய்தே சித்தர்கள் அட்டமா சித்தியைப் பெற்றனர். யோகப் பயிற்ச்சிகள் செய்து இந்தக் குண்டலினி சக்தியை விழிக்கச் செய்வதன் மூலம் யோகியர் இறையனு பவங்களைப் பெறுகிறார்கள். தெய்வீக இரகசியங்களை அறிகிறார்கள். குண்டலினி சக்தி உடம்பில் சக்தி அம்சமாக உள்ளது. உச்சந்தலையில் சிவா அம்சம் உள்ளது. 

குண்டலினி சக்தி சிவத்தைச் சேரும் இன்பமே பேரின்பம் இந்த அனுபவத்தை சித்தர்கள் நிறையவே தங்கள் பாடல்களில் பதிந்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை வாய்த்ததுக்குக் காரணமே இந்தக் குண்டலினி சக்தியின் ஆற்றலால் தான்.

யோகிகளும், சித்தர்களும் இந்த சக்தியை முழு அளவில் எழுப்பி உச்சந்தலைக்கு ஏற்றுகிறார்கள். அவர்களால் அளவற்ற அற்புதங்களை செய்வதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது. 

மேலும் எண்ணற்ற தலைப்புகளின் உண்மையை அறிவோம்

பிரசாத்

நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக